இலங்கை

ஆறுமுகன் தொண்டமானின் அஞ்சலிக்காக மீண்டும் திறக்கப்படும் நாடாளுமன்றம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் திடீர் மாரடைப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இன்றைய தினம் அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்னாலுள்ள வளாகத்தில் காலை 10.45 மணியிலிருந்து காலை 11 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டவுள்ளது. அதன்பின்னர், காலை 11 மணிக்கு ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாடாளுமன்ற வளாகத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் எனவும் நாடளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க