உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாத் தமிழ்ச்சங்கத்தின் சிந்தனை அரங்கம்!!

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் காலத்தின் தேவையாகிய சேதன விவசாயம் பற்றிய சிந்தனை அரங்கம் நேற்றையதினம் வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தலைமையுரையைத் தொடர்ந்து தொடக்கவுரையினை வவுனியா விவசாயத் திணைக்கள விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் நிகழ்த்தினார்.

சிந்தனையுரைகள் வரிசையில் “சேதன விவசாயம்-ஓர் அறிமுகம்” என்னும் பொருளில் ‘அமுதம்’ சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் உரை நிகழ்த்தினர்.

நிகழ்வில் அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கத்தினால் உற்பத்தி செய்யபட்ட விவசாய பொருட்கள் காட்சிப்படுத்தபட்டதுடன், விருந்தினர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது.

சபையோரின் கருத்துரைகளைத் தொடர்ந்து தமிழ்மணி மேழிக்குமரனின் மதிப்பீட்டுரையும் கவிஞர் கி.உதயகுமாரின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவுற்றது.

கருத்து தெரிவிக்க