உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யால தேசிய வனப்பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்

யால தேசிய வனப்பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் வறட்சியான வானிலை மற்றும் பூங்காவின் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையே இதற்கு காரணமாகும்.

அதற்கமைய இன்று இரு மாத காலத்திற்கு யால தேசிய வனப்பூங்கா மூடப்படுமென வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுற்றுலாப்பயணிகளுக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி மீண்டும் பூங்கா திறக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க