உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கை பிரதமர் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை மாலைத்தீவில் வைத்து சந்திக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் இந்து சமுத்திர மாநாடு மாலைத்தீவில் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது

இதில் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்கவுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிஹ், சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர், உட்பட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க