உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சிதலைவர் புறக்கணிக்கப்பட வேண்டும்’

இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் முறை­கே­டாக அர­சியல் நிர்­வா­கத்­தையே கொண்­டுள்­ளது.இவ்­விரு கட்­சி­களும் மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட வேண்டும் என சுயாதீன வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஜனா­தி­பதி வேட்­பாளர் நாகா­னந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு மற்றும் முன்­வைக்கும் கொள்­கைத்­திட்­டங்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கு­மான ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று இடம் பெற்­றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படும், மாகாண சபை முறைமை முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரு நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டு வரும் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன.

சட்­டத்தின் வாயி­லா­கவே அனைத்தும் இடம் பெறு­வ­தால்­நீ­தித்­துறை கட்­ட­மைப்பு முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

நீதிக்­கட்­ட­மைப்பு அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி சுயா­தீ­ன­மாக செயற்­பட்டால் மாத்­தி­ரமே நாடு அனைத்து துறை­க­ளிலும் முன்­னேற்­ற­ம­டையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

71 வருட கால பழைமை வாய்ந்த அர­சி யல் கட்­ட­மைப்பு முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். மக்­களின் வரிப்­ப­ணத்தை வீண­டிக்கும் அரச செயன்­மு­றை­களே அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

முறை­யற்ற அர­சியல் நிர்­வாக கட்டமைப் புக்களுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் முயற்சிக்கின்றார்கள். இவர்கள் மூவரும் அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க