உள்நாட்டு செய்திகள்புதியவை

ஐ.தே.கவில் குழப்பம் நிலவுவது புதிதல்ல: ருவான் விஜேவர்தன

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வரும் குழப்ப நிலை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பியகம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரையில் எந்தவொரு தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான நெடிக்கடி நிலைமை ஏற்படுவது இயல்பானதொன்றே. இது புதிய விடயமல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க