உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழ் பேசும் மக்கள் கைகோர்த்தால் எனது வெற்றி உறுதி; அநுர

தமிழ் முஸ்லீம் மக்கள் தம்முடன் கைகோர்க்கும் பட்சத்தில் தமது வெற்றி உறுதியாகும் என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாயநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம்களின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு பெற்று தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க