உள்நாட்டு செய்திகள்புதியவை

சிலாபம் பகுதியில் விபத்து; இருவர் உயிரிழப்பு

சிலாபம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் அதில் சென்ற பயணி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் பன்னல வீதியில் தங்கொட்டுவ பிரதேசத்திலேயே இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பில் இருந்து பயணித்த பேருந்தொன்றுடன் முச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க