உள்நாட்டு செய்திகள்புதியவை

எல்பிட்டி பிரதேச சபை தேர்தலை நடத்த உத்தரவு!

எல்பிட்டி பிரதேச சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

2017 இல் நடைபெற்ற பிரதேச சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

அதன்படி, இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் வரை எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலை நடத்துவதைத் தவிர்க்குமாறு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்த வேட்பு மனுவை ஏற்குமாறு நீதிபதி குழு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க