உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எம்மிடமிருந்து எந்த தீர்வினையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது

எமக்கு வாக்களிக்காமல் தமிழ் மக்கள் எம்மிடம் தீர்வினை எதிர்பார்க்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு வாக்களிக்காமல் எம்மிடமிருந்து எந்த தீர்வினையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது.

வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும்.

எங்களுக்கு எதிராக சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க