உள்நாட்டு செய்திகள்புதியவை

உந்துருளி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு

உந்துருளி விபத்தொன்றில் சிக்கி கல்முனையில் நேற்று (ஆக .28) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியை செலுத்தி சென்றவர் அதிவேகமாக சென்ற நிலையில் சமநிலையை இழந்து கல்லொன்றின் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கணேசன் தனுசியன், 30, மற்றும் அருலானந்தம் ஹரன், 19 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க