உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பிரதமருக்கும் புதிய இராணுவ தளபதிக்கு இடையில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இராணுவத்தின் 23வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷவேந்திர சில்வா தனது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் பிரதமரைச் சந்தித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன் போது இராணுவத் தளபதிக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் இராணுவத் தளபதி, பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கியுள்ளார்.

[ அரச தகவல் திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க