உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்வியங்காடு எதிர்ப்பு நடவடிக்கையில் நால்வர் பாதிப்பு

மட்டக்களப்பு – கல்வியங்காடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்காக, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் 2 பெண்களும் 2 ஆண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக மேலதிக படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற்பகுதியைக் கல்வியங்காடு மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நேற்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கருத்து தெரிவிக்க