உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரணிலுடன் முட்டிமோதுகிறார் சஜித்! ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு!!

” சுஜீவ சேனசிங்க, அஜித் பி. பெரேரா ஆகியோரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” –  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கட்சி தலைவரை விமர்சித்த சஜித் ஆதரவு அணி அமைச்சர்களான சஜீவ சேனசிங்க, அஜித் பி. பெரேரா ஆகியோருக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. விளக்கமளிப்பதற்காக இருவருக்கும் 9 ஆம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ” உங்களுக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவர்களை பாதுகாப்பீர்களா?” என அமைச்சர் சஜித்திடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ” மேற்படி இருவரை மட்டுமல்ல ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் பாதுகாப்பேன்.” என்றார்.

 

கருத்து தெரிவிக்க