உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘தீர்வுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’

தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதலில் தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் தலைமைகளுக்கிடையில் இருக்கும் பிரிவினையே தமது போராட்டம் நலிவடைந்து செல்லக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் யோகராசா கனகரஞ்சினி இவ்வாறு கூறினார்.

தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் எங்களது கோரிக்கைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் எனஅவர் தெரிவித்தார்.

அத்தோடு எமது உறவுகளின் தேடலுக்கான உறுதிமொழியை வழங்குபவர்களுக்கே தாம் ஆதரவு வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க