உள்நாட்டு செய்திகள்பண்பாடுபுதியவை

சிறப்பாக இடம் பெற்ற முள்ளிக்குளம் ‘பரலோக மாதா’ ஆலய திருவிழா

முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலய திருவிழா இன்று (26-08-2019) திங்கட்கிழமை காலை இடம் பெற்றது.

பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை வண பிதா லோறன்ஸ் அடிகளாரின் வழி நடத்தலின் கீழ் கடந்த 9 நாட்களாக மாலை திருபுகழ் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தன

நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை வேஸ்பர் நற்கருனை ஆராதனையுடன் இன்று திங்கட்கிழமை 26.08.2019 காலை திருவிழா திருப்பலியினை வண பிதா கிறிஸ்துநாயகம் அடிகளாரின் தலமையில் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

-தொடர்ந்து பரலோக அன்னையின் திருச்சொரூப பவணியும்,ஆசியும் வழங்கப்பட்டது.

பரலோக அன்னையின் திருவிழாவில் பங்குதந்தை, பங்கு மக்கள், குருக்கள், கன்னியர்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க