உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘வௌசரகம, சேனானிகம’ ஆகிய கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

‘செமட்ட செவன’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘வௌசரகம’ மற்றும் ‘சேனானிகம’ ஆகிய கிராமங்கள் மக்கள் உரிமைக்கு வழங்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

262 வது மற்றும் 263 வது மாதிரிக் கிராமங்கள் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டன.

அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டு கிராமங்களிலும் மொத்தமாக 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளடக்கியதாக கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க