உள்நாட்டு செய்திகள்புதியவை

களனி பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை

களனி பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

களனி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை மாலை 4.35 மணியளவில் குறித்த நபர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் களனி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய தொல்வா மரகலகே சமிந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க