உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி எமக்கு சாதகமாக அமையும்’

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி மொட்டு அணிக்கு சாதகமாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

கடுவெல பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதா என்ற விடயத்தில் சரியான முடிவை அவர் எடுப்பார் என நினைக்கின்றேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க