உள்நாட்டு செய்திகள்புதியவை

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு விளக்கமறியல்

திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரையும் எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வீடுகளுக்கு முச்சக்கர வண்டியில் சென்று வீடுகளை உடைத்து கொள்ளையிடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மேற்படி நான்கு பேரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் கொள்ளையிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க