உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பாரிய ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஓமந்தையில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அலுவலகம் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளமை தோதரப்பிலும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தெரியும் வகையில் திறக்கவேண்டிய அலுவலகத்தினை, யாருக்கும் தெரியாமல் திறந்துள்ளனர்.

இந்நிலையிலேயே நாம் எதிர்வரும் 30 ஆம் திகதி பாரியளவில் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளோம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க