மலையகச் செய்திகள்

குளவி கொட்டினால் சாமிமலையில் ஒருவர் பாதிப்பு

சாமிமலை சிங்காரவத்தை தோட்டத்தை சேர்ந்த 63 வயதான ஒருவர் கடந்த 22/ 08/ 2019 அன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார் .

பாதிக்கப்பட்ட நபர் மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் இவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலு‌ம் இந்த தோட்டத்தில் தேயிலை மலைகளில் கூடுதலான குளவி கூடுகள் காணப்படுவதாகவும் சில தொழிலாளர்களும் இதில் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க