உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பல்வேறு கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் நால்வர் கைது

திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பிரதேசங்களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர் நால்வரை தாம் கைது செய்ததாக தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்னப்பட்டவர்கள் திருகோணமலை நிலாவெளி மற்றும் மட்கோ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 18 பவுன் தங்க நகை உட்பட பல்வேறு வீட்டுப்பாவனைப்பொருட்களையும் தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்

திருகோணமலையில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர் பற்றி கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்,

கைதுசெய்யப்பட்டவர்களையும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க