உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘எழுக தமிழ் 2019’- பரப்புரை இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது!

எழுக தமிழ் 2019, பரப்புரை இன்று வெள்ளிக்கிழமை நல்லூரில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
எழுக தமிழ் நிகழ்வு அடுத்தமாதம் 16 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
இதற்கமைய நல்லூர்ககந்தன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண முன்னாள்  முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்த ஆரம்ப நிகழ்வில் ஈ.பீ.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க