உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சிப் பெற்ற ஒருவர் கைது

அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவராக செயற்பட்ட ஜமாத்தே மில்லதே ஈப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நுவரெலியாவில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சிப் பெற்றுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

´அபு இக்ரிமா´ எனப்படும் மொஹமட் ரஃபைடீன் மொஹமட் அலி என்ற இந்த சந்தேகநபர் வடதெனிய, வெலங்பொட, கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க