உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சீரற்ற வானிலையால் தடை

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சீரற்ற வானிலையால் தடைப்பட்டுள்ளது.

கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டரங்கில் குறித்த போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 1 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அப்போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களையும் 2 வது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டகளை பெற்றது.

கருத்து தெரிவிக்க