உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சிறைச்சாலை அதிகாரி கொலை; சந்தேக நபர் ஒருவர் கைது!

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி பாடசாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி கொலைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களில் ஒருவர் இக்கொலைக்கு உதவி செய்தமை தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து டி-56 ரக துப்பாக்கிக்கான 63 ரவைகள் மற்றும் 15 சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 27 வயதான சந்தேகநபர் மீது ஏற்கனவே போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க