உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது!

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை சம்பூர் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகினர்.

கைதானவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட இரு வலைகளும் நான்கு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை திருகோணமலை கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க