உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யுவதியொருவரை கடத்திச் சென்ற 11 பேர் கைது

வவுனியாவில் யுவதியொருவரை கடத்தி சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் மரத்தோடி கஞ்சனமோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

யுவதி கிரேன்பாஸ் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்றுள்ளார்.

இரண்டு முச்சக்கர வண்டிகளில் வருகை தந்த நபர்கள் இவ் யுவதியை கடத்திச் சென்றதுடன் புலியங்குளம் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து குறித்த வண்டிகளை சுற்றி வளைத்தனர்.

யுவதியை கடத்திச் சென்ற சந்தேக நபரில் பிரதான சந்தேக நபராக இவ்யுவதியின் வீட்டை புனரமைப்பதற்காக சென்ற நபர் என தெரிய வந்துள்ளது

கருத்து தெரிவிக்க