உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற தாய் கைது

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாயொருவர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் கைதானதாக தெரியவருகிறது. இப்பெண் ஹட்டன் டிக்கோயா வனராஜா பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு மூன்று வயதுடைய பெண் பிள்ளையொன்றும் 8 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க