உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உந்துருளியில் பயணித்த இருவர் உயிரிழப்பு

மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மெதிரிகிரியவில் இருந்து மீகஸ்வேவ நோக்கி பயணித்த உந்துருளியுடன் எதிர் திசையிலிருந்து வந்த மற்றுமொரு உந்துருளி மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் இரண்டு உந்துருளிகளிலும் பயணித்த மூன்று பேர் பலத்த காயங்களுடன் மெதிரிகிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், இரண்டு உந்துருளிகளின் சாரதிகள் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் அப்பகுதியில் வசித்து வரும் 37 மற்றும் 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க