உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படடவர்கள் தமிழகத்தின் புதுக்கோடடையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்படட மீனவர்கள் பயன்படுத்திய படகு நெடுந்தீவு கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதுடன் கைது செய்த மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்த நீரியல் வளம் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கருத்து தெரிவிக்க