உள்நாட்டு செய்திகள்புதியவை

போதையில் வாகனம் செலுத்திய 9400 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலத்தில் போதையில் வாகனம் செலுத்திய 217 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் கிட்டத்தட்ட 9400 தனிநபர்கள் இன்று வரையில் (ஆகஸ்ட் 19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் ஒருமாத விசேட திட்டம் கடந்த ஜூலை 5 அம திகதி காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த திட்டத்தை ஆண்டு முழுவதும் நீடிக்க தீர்மானிக்கபப்ட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க