உள்நாட்டு செய்திகள்புதியவை

ரத்கம கொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இந்த ஆண்டு ரத்கமவில் இரண்டு தொழிலதிபர்கள் கொல்லப்பட்ட வழக்கின் 17 சந்தேக நபர்களுக்கு செப்டெம்பர் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை காலி தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டது.ULL

சந்தேக நபர்களில் தெற்கு காவல்துறை விசேட புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட 15 அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரி ஆகியோர் அடங்குவர்.

குறித்த நபர்கள் தொழிலதிபர்களான அசெல மஞ்சுல குமார மற்றும் ரசித் சிந்தகவை ஜனவரி 23 ம் திகதியன்று கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க