உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டு தனியார் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பேரணி

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு தெரிவித்து மாபெரும் மக்கள் பேரணி இடம்பெற்று வருகின்றது.

குறித்த பேரணி திட்டமிட்டபடி அதுரலிய ரத்ன தேரர் தலைமையில் இன்று மட்டக்களப்பு – கிரான் சந்தியில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் ஆரம்பமான இப்பேரணி, கிரான் பூங்கா வரை ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளனர்.

இதில் பிக்குக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இது குறித்து அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் தேரர் சாட்டி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்து தெரிவிக்க