உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பொலிஸ் நிலையத்திற்கான பரிசோதனைகள் இன்று காலை காத்தான்குடியில் ஆரம்பம்

பொலிஸ் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான பொலிஸ் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஓர் கட்டமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கான பரிசோதனைகள் இன்று காலை இடம்பெற்றன.

நாவற்குடா ஜீவஒளி விளையாட்டு மைதானத்தில் பொலிசாரின் அணிவகுப்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மீதான பரிசோதனைகளும் இடம் பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிஸ் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகள் மற்றும் கழுத்துப்பட்டி உட்பட பொலிசாரினால் பாவனையிலுள்ள வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.

கருத்து தெரிவிக்க