உள்நாட்டு செய்திகள்

குடிநீர் பிரச்சினையை நீக்க கோரி வீதியை மறித்து போராட்டம்

காலி – கொழும்பு பிரதான வீதியை வழிமறித்து மஹிந்துருவ பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரியே அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போராட்டம் காரணமாக அந்த பகுதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க