உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

திருகோணமலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

போதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை சிறைச்சாலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு – 12 இல் வசித்து வந்த ஜயசிங்க ஆராய்ச்சிலாகே ஜகத் சின்தக (49 வயது) என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து திருகோணமலை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறைக்கைதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனது தந்தை உயிரிழந்தமை தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்தவரின் மகன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க