உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்

இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது.
ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்பட இருப்பதாக‌ அறிய‌ முடிகின்றது.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் சிறிகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க