உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சஜித்தை களமிறக்குவோம்; கவலை வேண்டாம்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்தழைப்புடன் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் எவரும் கவலையடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற வீதியை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காட்சியைத்தவிர்த்து மற்றொருவர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியில் வாய்ப்பு இல்லை.

2010 ஆம் 2015 ஆம் ஆண்டுகளில் கட்சியின் முறையற்ற தீர்மானங்களினால், தோல்வியை நாங்களே ஏற்படுத்திக் கொண்டோம்.

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உயிர்த்தியாகம் செய்தாவது எங்களின் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க