உள்நாட்டு செய்திகள்புதியவை

நல்லூர் ஆலயத்தில் பொருத்தப்பட்ட சோதனை இயந்திரம் அகற்றப்பட்டது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் அதனை தற்போது அகற்றியுள்ளனர்.

ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புக்காக நேற்று வியாழக்கிழமை புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன

இந்நிலையில் இந்த சோதனைகளால் அடியவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதைதொடந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித் இயந்திரங்கள் நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதனால் அவற்றை இன்றைய தினம் காலை மீண்டும் எடுத்து சென்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க