உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

1கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ ரக போதைப்பொருள் மீட்பு

தலை மன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடற்டையினர் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ ரக போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1.05 கிலோ கிராம் எடையுள்ள ஒரு கேடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பொதியினையே கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரியின் சிறப்பு சோதனையின் போது மீட்கப்பட்டதோடு குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

-மீட்கப்பட்ட போதைப்பொருள் தலைமன்னார் பொலிஸாரிடம் மேலதிக விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க