உள்நாட்டு செய்திகள்புதியவை

இந்த ஆண்டில் இதுவரையில் 31 தொன் போதைப்பொருள் பறிமுதல்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இதுவரை நாட்டிற்கு கடத்தப்பட்ட பல்வேறு வகையான 31 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது.

இவற்றில் 450 கிலோகிராம் ஹெராயின், 2.3 தொன் கேரள கஞ்சா, மூன்று கிலோ உள்ளூர் கஞ்சா, 29 தொன் பீடி இலைகள், ஒரு கிலோகிராம் ஹாஷிஷ் ஆகியவை அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 802 போதை மாத்திரைகள், 8,140 சிகரெட்டுகள் மற்றும் ‘மடன மொடகா’ 6,800 பெக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில்,தலைமன்னார் பகுதியில் 1.5 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்களையும் கடற்படை இன்று கண்டுபிடித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க