உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம் – துமிந்த

ஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க