உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டு பல்கலைகழகத்தை அரசுடைமையாக்க கோரி பேரணி!

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தை அரசுடைமையாக்குமாறு தெரிவித்து மாபெரும் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் சந்தியில் மேற்படி மக்கள் பேரணி இனம்பெறவுள்ளது என வர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அந்த நிறுவனம் மீது இதுவரையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த பேரணியில் அணி திரளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு குறித்த பேரணியில் புதிய ‘நாட்டை பாதுகாக்கும் அமைப்பை’ மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க