உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நல்லூர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார் பிரதமர்

மூன்று நாள் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு நல்லூர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

இந்து ஆகம முறைப்படி வேட்டி அணிந்து நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லூர் ஆதீன கர்த்தாக்களுடனும் சந்திப்பினை மேற்கொண்டார்.

பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு  பூசை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

குறித்த நல்லூர் விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி மாநகர ஆணையாளர் யாழ்ப்பாண பிரதேச செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்து தெரிவிக்க