உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘பீகாஸ் நிறுவனத்தின் கண்டி வளாக பட்டமளிப்பு வைபவம்’

பீ-காஸ் நிறுவனத்தின் கண்டி வளாகத்தின் 9 வது பட்டமளிப்பு வைபவம் (கெண்டி கெம்பஸ்) கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் (11.8.2109)இடம் பெற்றது.

பிரதம அதிதியாக பியசன்ஸ் நிறுவன ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் திருமதி பிரமிலா போல்ராஜ், விசேட அதிதிகளாக பேராசிரியர் சரத் கொடிதுவக்கு,பேராசிரியர் சூரிய பிபிலே, நெப்ட்யூன் எடிபிகேசன் நிறுவன பணிப்பாளர் செல்வி கிருஷ்னி பாலசுப்ரமணியம்,பீகாஸ்
நிறுவனப் பணிப்பாளர் ஜே.எம்.நிவாஸ் உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

சட்டம், கட்டடக்கலை,கணணனி தொழில்நுட்பம், வாணிப வர்த்தக முகாமைத்துவம் உற்பட தொழில் சார்துறை தொடர்பான பட்டங்களைப் பெற்ற சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு தமது உயர்பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

முன்னாள் கல்விப் பணிப்பாளர்  மற்றும் பீகாஸ் பணிப்பாளர் ஜே.எம்.
நிவாஸ் ஆகியோர் விளக்கேற்றுவதையும், அதிதிகள் பரிசளிப்தையும், படங்களில்
காணலாம்.

இவ்வைபவத்தில் பீகாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சம்ரின் வரவேற்புரையாற்றினர்.

பீகாஸ் மத்திய நிலைய முகாமையாளர் எம்.எம்.முபாரக் வைபவத்தில்
ஒழுங்கு செய்திருந்தார்.

கருத்து தெரிவிக்க