உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘உயிரிழந்த உறவுகளுக்கு செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி’

இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் 2016 ஆம் ஆண்டு இன்றைய நாளில் காலை 07.05 மணியளவில் செஞ்சோலை வளாகத்தில் நடாத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் அங்கு இருந்த பாடசாலை மாணவர்கள் பணியாளர்கள் உட்பட பலர் அந்த இடத்திலேயே பலியாகி இருந்தனர்.
தமிழின அழிப்பின் ஓர் அங்கமாக கட்டவிழ்த்து விடப்பட்ட மற்றுமொரு மிகப்பாரிய படுகொலையாக இந்த படுகொலை வரலாற்றில் தடம் பதித்து வந்தது.
அந்த வகையிலே இந்த  உயிரிழந்த உறவுகளின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதி எங்கும் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்த வகையிலே குறித்த தாக்குதல் இடம்பெற்ற காலை 07.05 மணிக்கு செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வானது தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உடைய உறுப்பினர் சி குகனேசன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நேரத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது பிள்ளைகளை உறவுகளை பறிகொடுத்தவர்கள் பொதுமக்கள் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க