உள்நாட்டு செய்திகள்புதியவை

அவிசாவளையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

அவிசாவளை , தல்துவ – அமிதிரிகல வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாரதியான குடும்ப தலைவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர். குகுலுகல பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளரை பிரதேசவாசிகள் தாக்கியதில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை காவல் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க