உள்நாட்டு செய்திகள்பண்பாடு

கட்சியின் கொள்கைகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

கட்சியின் விதிமுறைகளை மீறும் எந்த உறுப்பினர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு பதுளையில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு கட்சியில் எதிர்ப்புகள் எதுவும் இல்லை. எனினும் அதில் பங்கேற்கும் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் கொள்கையினை கடைப்பிடிக்க வேண்டும்.

அதை மீறி செயற்பட்டால் அதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க